|
பாடல் எண் :2085 | அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள் பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர் கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே. |
| 10 | பொ-ரை: கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள், இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர். கு-ரை: அரட்டு - துட்டச்செயல். அருத்தி - அன்பு. கயவக் கணம் - கீழ்மக்கட்கூட்டம். |
|