5.12 திருவீழிமிழலை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1184

கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது, வீழிமிழலைக்கே.

1
உரை
பாடல் எண் :1185

ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை,
நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.

2
உரை
பாடல் எண் :1186

புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்;
வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்;
நினைய நின்றவன், ஈசனையேழு எனா;-
வினை இலார் தொழும் வீழிமிழலையே.

3
உரை
பாடல் எண் :1187

மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர்,
கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர்,
பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர்
வேடத்தார், தொழும் வீழிமிழலையே.

4
உரை
பாடல் எண் :1188

எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை;
விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.

5
உரை
பாடல் எண் :1189

குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்!
தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்:
மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!

6
உரை
பாடல் எண் :1190

தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய
நீரன்; ஆடிய நீற்றன்; வண்டு ஆர் கொன்றைத்
தாரன்; மாலையன்; தண் நறுங்கண்ணியன்;
வீரன் வீழிமிழலை விகிர்தனே.

7
உரை
பாடல் எண் :1191

எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை
நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர்
பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே!

8
உரை
பாடல் எண் :1192

நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி;
காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்;
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்;
மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.

9
உரை
பாடல் எண் :1193

பாலையாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்,
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும், வீழிமிழலையே!

10
உரை
பாடல் எண் :1194

மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடிதோள் இறக்
கழல் கொள் காலில்-திருவிரல் ஊன்றலும்,
ழுமிழலையான் அடி வாழ்க!ழு என, விட்டதே.

11
உரை
5.13 திருவீழிமிழலை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1195

என் பொனே! இமையோர் தொழு பைங்கழல்
நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்;
செம்பொனே! திரு வீழிமிழலையுள்
அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!

1
உரை
பாடல் எண் :1196

கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,-
விண் உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!

2
உரை
பாடல் எண் :1197

ஞாலமே! விசும்பே! நலம் தீமையே!
காலமே! கருத்தே! கருத்தால்-தொழும்
சீலமே! திரு வீழிமிழலையுள்
கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!

3
உரை
பாடல் எண் :1198

முத்தனே! முதல்வா! முகிழும் முளை
ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய
சித்தனே! திரு வீழிமிழலையுள்
அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

4
உரை
பாடல் எண் :1199

கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற
திருவனே! திரு வீழிமிழலையுள்
குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!

5
உரை
பாடல் எண் :1200

காத்தனே, பொழில் ஏழையும்! காதலால்
ஆத்தனே, அமரர்க்கு! அயன் தன் தலை
சேர்த்தனே! திரு வீழிமிழலையுள்
கூத்தனே! அடியேனைக் குறிக்கொளே!

6
உரை
பாடல் எண் :1201

நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
ஓதி வானவரும்(ம்) உணராதது ஓர்
வேதியா! விகிர்தா! திரு வீழியுள்
ஆதியே!-அடியேனைக் குறிக்கொளே!

7
உரை
பாடல் எண் :1202

பழகி நின் அடி சூடிய பாலனைக்
கழகின்மேல் வைத்த காலனைச் சாடிய
அழகனே! அணி வீழிமிழலையுள்
குழகனே!-அடியேனைக் குறிக்கொளே!

8
உரை
பாடல் எண் :1203

அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு
உண்ட வானவனே! உணர்வு ஒன்று இலேன்;
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள்
கொண்டனே!-அடியேனைக் குறிக்கொளே!

9
உரை
பாடல் எண் :1204

ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்
வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே! திரு வீழிமிழலையுள்
அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

10
உரை