கரைந்து கை தொழுவாரையும் காதலன்; வரைந்து வைது எழுவாரையும் வாடலன்; நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் விரைந்து போவது, வீழிமிழலைக்கே.
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை, நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார் நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார், வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.
புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்; வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்; நினைய நின்றவன், ஈசனையேழு எனா;- வினை இலார் தொழும் வீழிமிழலையே.
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர், கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர், பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர் வேடத்தார், தொழும் வீழிமிழலையே.
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை; விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்! தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்: மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!
தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய நீரன்; ஆடிய நீற்றன்; வண்டு ஆர் கொன்றைத் தாரன்; மாலையன்; தண் நறுங்கண்ணியன்; வீரன் வீழிமிழலை விகிர்தனே.
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர் பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழும் வீழிமிழலையே!
நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி; காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்; வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்; மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.
பாலையாழொடு செவ்வழி பண் கொள மாலை வானவர் வந்து வழிபடும், ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி வேலையார் தொழும், வீழிமிழலையே!
மழலை ஏற்று மணாளன் திருமலை சுழல ஆர்த்து எடுத்தான் முடிதோள் இறக் கழல் கொள் காலில்-திருவிரல் ஊன்றலும், ழுமிழலையான் அடி வாழ்க!ழு என, விட்டதே.
என் பொனே! இமையோர் தொழு பைங்கழல் நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்; செம்பொனே! திரு வீழிமிழலையுள் அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,- விண் உளார் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே! காலமே! கருத்தே! கருத்தால்-தொழும் சீலமே! திரு வீழிமிழலையுள் கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!
முத்தனே! முதல்வா! முகிழும் முளை ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய சித்தனே! திரு வீழிமிழலையுள் அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம் ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற திருவனே! திரு வீழிமிழலையுள் குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!
காத்தனே, பொழில் ஏழையும்! காதலால் ஆத்தனே, அமரர்க்கு! அயன் தன் தலை சேர்த்தனே! திரு வீழிமிழலையுள் கூத்தனே! அடியேனைக் குறிக்கொளே!
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து ஓதி வானவரும்(ம்) உணராதது ஓர் வேதியா! விகிர்தா! திரு வீழியுள் ஆதியே!-அடியேனைக் குறிக்கொளே!
பழகி நின் அடி சூடிய பாலனைக் கழகின்மேல் வைத்த காலனைச் சாடிய அழகனே! அணி வீழிமிழலையுள் குழகனே!-அடியேனைக் குறிக்கொளே!
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு உண்ட வானவனே! உணர்வு ஒன்று இலேன்; விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் கொண்டனே!-அடியேனைக் குறிக்கொளே!
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம் வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய திருத்தனே! திரு வீழிமிழலையுள் அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!