5.18 திருக்கடம்பந்துறை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1244

முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,
ழுகற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்திழு என்றாள்-எங்கள் பேதையே.

1
உரை
பாடல் எண் :1245

தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும்,
முனகு தீரத் தொழுது எழுமின்களோ!
கனகப்புன் சடையான் கடம்பந்துறை
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே.

2
உரை
பாடல் எண் :1246

ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,
கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன்,
காரிகை உடையான், கடம்பந்துறை,
சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!

3
உரை
பாடல் எண் :1247

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை-
வண்ண நல் மலரான், பல தேவரும்,
கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை
நண்ண, நம் வினை ஆயின நாசமே.

4
உரை
பாடல் எண் :1248

மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ!
கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!

5
உரை
பாடல் எண் :1249

நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப்
பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ!
கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை,
அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.

6
உரை
பாடல் எண் :1250

அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து
புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்;
கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை
உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!

7
உரை
பாடல் எண் :1251

பூ மென்கோதை உமை ஒருபாகனை
ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்!
காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.

8
உரை
பாடல் எண் :1252

பார் அணங்கி வணங்கிப் பணி செய
நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர்
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே

9
உரை
பாடல் எண் :1253

நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட!
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்;
காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.

10
உரை