5.19 திருக்கடம்பூர்க் கரக்கோயில்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1254

தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்-
கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.

1
உரை
பாடல் எண் :1255

வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும்
சொல வலான்; சுழலும் தடுமாற்றமும்
அல வலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக்
கல வலான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

2
உரை
பாடல் எண் :1256

பொய் தொழாது, புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா,
வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர்
கைதொழா எழுமின், கரக்கோயிலே!

3
உரை
பாடல் எண் :1257

துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே!
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே;
எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்-
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே!

4
உரை
பாடல் எண் :1258

சுனையுள் நீலமலர் அன கண்டத்தன்,
புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழலான், கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.

5
உரை
பாடல் எண் :1259

குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்-
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

6
உரை
பாடல் எண் :1260

பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை
மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

7
உரை
பாடல் எண் :1261

அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்,
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக்
கங்கையான், உறையும் கரக்கோயிலைத்
தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.

8
உரை
பாடல் எண் :1262

நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான்
தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்;
என் கடன் பணி செய்து கிடப்பதே.

9
உரை
பாடல் எண் :1263

பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,
மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன்,
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்-
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

10
உரை
பாடல் எண் :1264

வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்,
திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.

11
உரை
5.20 திருக்கடம்பூர்க் கரக்கோயில்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1265

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

1
உரை
பாடல் எண் :1266

வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர்
கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்;
பொன்னின் மல்கு புணர்முலையாளொடும்
மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

2
உரை
பாடல் எண் :1267

இல்லக் கோலமும், இந்த இளமையும்,
அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே!
ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே!

3
உரை
பாடல் எண் :1268

வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவு இடம்-
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

4
உரை
பாடல் எண் :1269

திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்-
பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும்,
தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

5
உரை
பாடல் எண் :1270

மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லை ஆன பிரானார் இருப்பு இடம்-
கொல்லை முல்லை, கொழுந் தகை மல்லிகை,
நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

6
உரை
பாடல் எண் :1271

தளரும் வாள் அரவத்தொடு தண்மதி
வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது-
கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக்
களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

7
உரை
பாடல் எண் :1272

உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவு இடம்-
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்,
கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே.

8
உரை
பாடல் எண் :1273

வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்-
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்,
கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

9
உரை
பாடல் எண் :1274

பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன்
உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற,
இரக்கம் இன்றி இறை விரலால்-தலை
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

10
உரை