5.29 திருஆவடுதுறை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1355

நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

1
உரை
பாடல் எண் :1356

தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை,
அளவு கண்டிலள்; ஆவடுதண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள்-கன்னியே.

2
உரை
பாடல் எண் :1357

ழுபாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை
ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள்
ஆதி-ஆவடுதண்துறை மேவிய
சோதியே! சுடரே!ழு என்று சொல்லுமே.

3
உரை
பாடல் எண் :1358

கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்;
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள்
ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!

4
உரை
பாடல் எண் :1359

கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன்,
பருகு பால் அமுதே எனும் பண்பினன்,
அருகு சென்று இவள், ழுஆவடுதண்துறை
ஒருவன் என்னை உடைய கோழு என்னுமே.

5
உரை
பாடல் எண் :1360

குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும்,
தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்;
அழகன்; ழுஆவடுதண்துறையா!ழு எனக்
கழலும், கைவளை காரிகையாளுக்கே.

6
உரை
பாடல் எண் :1361

பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத்
தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!

7
உரை
பாடல் எண் :1362

ழுபிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;
அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை
இறைவநென்னை உடையவன்ழு என்னுமே.

8
உரை
பாடல் எண் :1363

வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்
மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்;
ஐயன்; ழுஆவடுதண்துறையா!ழு என,
கையில் வெள்வளையும் கழல்கின்றதே.

9
உரை
பாடல் எண் :1364

ழுபக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்;
அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை
நக்கன்ழு என்னும், இந் நாண் இலி; காண்மினே!

10
உரை