5.30 திருப்பராய்த்துறை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1365

கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;-
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.

1
உரை
பாடல் எண் :1366

மூடினார், களியானையின் ஈர் உரி;
பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்;
சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.

2
உரை
பாடல் எண் :1367

பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்;
நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்;
சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்;
இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.

3
உரை
பாடல் எண் :1368

முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர்,
என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்-
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்;
அன்பராய் இருப்பாரை அறிவரே.

4
உரை
பாடல் எண் :1369

போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
ழுவாதை தீர்க்க!ழு என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!

5
உரை
பாடல் எண் :1370

நல்ல நால்மறை ஓதிய நம்பனை,
பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை,
தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை,
வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!

6
உரை
பாடல் எண் :1371

நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை;
பருப்பதம் மதயானை உரித்தவன்,
திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.

7
உரை
பாடல் எண் :1372

எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்,
விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.

8
உரை
பாடல் எண் :1373

நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி;
திருப் பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே.

9
உரை
பாடல் எண் :1374

தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.

10
உரை
பாடல் எண் :1375

அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!
பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!

11
உரை