5.35 திருப்பழனம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1417

அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை
உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,
திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.

1
உரை
பாடல் எண் :1418

வையம் வந்து வணங்கி வலம் கொளும்
ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்;
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே.

2
உரை
பாடல் எண் :1419

வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை
திண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்;
எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!

3
உரை
பாடல் எண் :1420

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட,
வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்க, பாம்பினைப் பற்றும் பழனத்தான்,
தார்க் கொள் மாலை சடைக் கரந்திட்டதே.

4
உரை
பாடல் எண் :1421

நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர்
கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்-
பாலும் உண்டு, பழனன்பால்; என்னிடை
மாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.

5
உரை
பாடல் எண் :1422

மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர்
சந்தம் ஆகத் திருச்சடை சாத்துவான்,
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்,
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே.

6
உரை
பாடல் எண் :1423

மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்;
பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;-
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்கண் நின்று தலை வணங்கார்களே.

7
உரை
பாடல் எண் :1424

ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவார் அலர், தீவினையாளர்கள்;
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான், உமையாளொடும் கூடவே.

8
உரை
பாடல் எண் :1425

சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்-
தெற்றினார் திரியும் புரம்மூன்று எய்தான்,
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை,
எற்றினான் மறக்கேன், எம்பிரானையே?

9
உரை
பாடல் எண் :1426

பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன்,
பங்கன், என்றும் பழனன், உமையொடும்
தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.

10
உரை