5.38 திருக்கடவூர்மயானம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1448

குழை கொள் காதினர், கோவண ஆடையர்,
உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்;
பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.

1
உரை
பாடல் எண் :1449

உன்னி வானவர் ஓதிய சிந்தையில்
கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்;
தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம்
ழுபின்னைழு என்னார், பெருமான் அடிகளே.

2
உரை
பாடல் எண் :1450

சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர்,
ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர்,
காலகாலர்-கடவூர் மயானத்தார்;
மாலை மார்பர், பெருமான் அடிகளே.

3
உரை
பாடல் எண் :1451

இறைவனார், இமையோர் தொழு பைங்கழல்
மறவனார்-கடவூரின் மயானத்தார்;
அறவனார், அடியார் அடியார் தங்கள்
பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே.

4
உரை
பாடல் எண் :1452

கத்து காளி கதம் தணிவித்தவர்,
மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்;
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு
பித்தர்காணும், பெருமான் அடிகளே.

5
உரை
பாடல் எண் :1453

எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர்,
கரியர்தாம்-கடவூரின் மயானத்தார்;
அரியர், அண்டத்து உளோர் அயன் மாலுக்கும்;
பெரியர்காணும், பெருமான் அடிகளே.

6
உரை
பாடல் எண் :1454

அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை
கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்கு உறும்
பிணம் கொள் காடர் - பெருமான் அடிகளே.

7
உரை
பாடல் எண் :1455

அரவு கையினர், ஆதி புராணனார்-
மரவு சேர் கடவூரின் மயானத்தார்;
பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர்,
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.

8
உரை