வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்; கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் அண்ணலே அறிவான், இவள் தன்மையே!
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான், திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள், பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே.
மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்; குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ: ழுஅழகனே! கழிப்பாலை எம் அண்ணலே! இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்!ழு என்னுமே.
செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்; கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம் ஐயனே அறிவான், இவள் தன்மையே.
கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய ஒருத்தனை, உமையாள் ஒருபங்கனை, ழுஅருத்தியால் சென்று கண்டிட வேண்டும்ழு என்று ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே.
ழுகங்கையைச் சடை வைத்து மலைமகள்- நங்கையை உடனே வைத்த நாதனார், திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான், இங்கு வந்திடும்ழு என்று இறுமாக்குமே.
ழுஐயனே! அழகே! அனல் ஏந்திய கையனே! கறை சேர்தரு கண்டனே! மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் ஐயனே, விதியே, அருள்!ழு என்னுமே.
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை, முத்தனை, முடிவு ஒன்று இலா மூர்த்தியை, அத்தனை, அணி ஆர் கழிப்பாலை எம் சித்தனை, சென்று சேருமா செப்புமே!
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை- அஞ்சும் நான்கும் ஒன்று(ம்) இறுத்தான் அவன் என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான் துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே.