5.50 திருவாய்மூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1569

ழுஎங்கே?ழு என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
ழுஅங்கே வா!ழு என்று போனார்; அது என்கொலோ?

1
உரை
பாடல் எண் :1570

மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை, ழுவா!ழு என்று போனார்; அது என்கொலோ?

2
உரை
பாடல் எண் :1571

தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ழுஆர்?ழு என்றேன்;
ழுஅஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன்ழு என்றார்;
ழுஉஞ்சேன்ழு என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்;
வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?

3
உரை
பாடல் எண் :1572

கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;
ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்;
வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?

4
உரை
பாடல் எண் :1573

ழுஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லைழு என்று
உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க்
கள்ளியார் அவர் போல, கரந்ததே!

5
உரை
பாடல் எண் :1574

ழுயாதே செய்தும், யாம் அலோம்; நீழு என்னில்,
ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்-
ழுபோதே!ழு என்றும், புகுந்ததும், பொய்கொலோ?

6
உரை
பாடல் எண் :1575

பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்-
தேடிக்கொண்டு, ழுதிரு வாய்மூர்க்கேழு எனா,
ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?

7
உரை
பாடல் எண் :1576

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்;
மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப்
பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!

8
உரை
பாடல் எண் :1577

தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும்,
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் ழுவாய்மூருக்கேழு எனா,
புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?

9
உரை
பாடல் எண் :1578

தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை;
வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை
ழுதூண்டிக் கொள்வன், நான்ழு என்றலும், தோன்றுமே.

10
உரை