5.64 திருக்கோழம்பம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1711

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்;
கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்-
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.

1
உரை
பாடல் எண் :1712

கயிலை நல்மலை ஆளும் கபாலியை,
மயில் இயல் மலைமாதின் மணாளனை,
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்
உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே.

2
உரை
பாடல் எண் :1713

வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்-
தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்-
ழுதாழம் பூமணம் நாறிய தாழ் பொழில்
கோழம்பா!ழு என, கூடிய செல்வமே.

3
உரை
பாடல் எண் :1714

பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்;
கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!

4
உரை
பாடல் எண் :1715

தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர்
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்;
நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.

5
உரை
பாடல் எண் :1716

நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்-
வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில்
கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட
ஆதி, பாதம் அடைய வல்லார்களே.

6
உரை
பாடல் எண் :1717

முன்னை நான் செய்த பாவம் முதல் அற,
பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது-
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.

7
உரை
பாடல் எண் :1718

ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்-
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.

8
உரை
பாடல் எண் :1719

அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி
பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை;
குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து
உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?

9
உரை
பாடல் எண் :1720

சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய,
அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள் உடையார்களே.

10
உரை
பாடல் எண் :1721

துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப்
பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான்
ழுகொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன்ழு என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே.

11
உரை