பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார், பாவம் ஆயின பாறிப் பறையவே, தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.
என்னன், என் மனை, எந்தை, என் ஆர் உயிர், தன்னன், தன் அடியேன் தனம் ஆகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்; இன்னன் என்று அறிவு ஒண்ணான், இயற்கையே!
குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்! மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்; புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் கற்று வாழ்த்தும், கழிவதன் முன்னமே!
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான், தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான், மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை- பூவனூர் புகுவார் வினை போகுமே.
ழுபுல்லம் ஊர்தி ஊர்-பூவனூர், பூம் புனல் நல்லம், மூர்த்தி நல்லூர், நனிபள்ளி ஊர், தில்லை ஊர், திரு ஆரூர், தீக்காலிநல்- வல்லம் ஊர்ழு என, வல்வினை மாயுமே.
அனுசயப்பட்டு அது இது என்னாதே, கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி, புனிதனை-பூவனூரனை- போற்றுவார் மனிதரில்- தலைஆன மனிதரே.
ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்; வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர் பாதி ஆனான்; பரந்த பெரும் படைப் பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.
பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில் நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம், கோவலூர், குடவாயில், கொடுமுடி, மூவலூரும்- முக்கண்ணன் ஊர்; காண்மினே!
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்- பாவகாரிகள்-சொல்வலைப்பட்டு, நான், தேவதேவன் திருநெறி ஆகிய பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே!
நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன், வாரணன், குமரன், வணங்கும் கழல் பூரணன்திருப் பூவனூர் மேவிய காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே.
மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும், பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!