5.66 திருவலஞ்சுழி
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1733

ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,
பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை,
மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை,
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

1
உரை
பாடல் எண் :1734

கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன்,
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப்
பயில்கிலார்சிலர் - பாவித்தொழும்பரே.

2
உரை
பாடல் எண் :1735

இளைய காலம் எம்மானை அடைகிலாத்
துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல்
வளையும் காலம், வலஞ்சுழி ஈசனைக்
களைக்கண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!

3
உரை
பாடல் எண் :1736

நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்கு ஆய்க்
குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன்,
மறை கொள் நாவன், வலஞ்சுழி மேவிய
இறைவனை, இனி என்றுகொல் காண்பதே?

4
உரை
பாடல் எண் :1737

விண்டவர் புரம் மூன்றும் எரி கொளத்
திண் திறல் சிலையால் எரி செய்தவன்,
வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு, அடிமைத் திறத்து ஆவனே.

5
உரை
பாடல் எண் :1738

படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை
அடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான்,
மடந்தை பாகன், வலஞ்சுழியான், அடி
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.

6
உரை
பாடல் எண் :1739

நாக்கொண்டு(ப்) பரவும்(ம்) அடியார் வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்,
மாக் கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன்
ஏக் கொளப் புரம் மூன்று எரி ஆனவே.

7
உரை
பாடல் எண் :1740

தேடுவார், பிரமன் திருமால் அவர்;
ஆடு பாதம் அவரும் அறிகிலார்;
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.

8
உரை
பாடல் எண் :1741

கண் பனிக்கும்; கை கூப்பும்; ழுகண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன்ழு எனும்;
வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!

9
உரை
பாடல் எண் :1742

இலங்கை வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்,
மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி
வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.

10
உரை