வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர் செத்தபோது, செறியார் பிரிவதே; நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்- நெய் அது ஆடிய நீலக்குடி அரன், மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம் கையில் ஆமலகக்கனி ஒக்குமே.
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு- கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய நீற்றன் நீலக்குடி உடையான்; அடி போற்றினார் இடர் போக்கும் புனிதனே.
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல் ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் நீலன் -நீலக்குடி உறை நின்மலன்; காலனார் உயிர் போக்கிய காலனே.
ழுநேச நீலக்குடி அரனே!ழு எனா நீசராய், நெடுமால் செய்த மாயத்தால், ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய், நாசம் ஆனார், திரிபுரநாதரே.
கொன்றை சூடியை, ழுகுன்றமகளொடும் நின்ற நீலக்குடி அரனே!ழு எனீர்- என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்; பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால், நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!
ழுஅழகியோம்; இளையோம்ழு எனும் ஆசையால் ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே, நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!
கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள் பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன் நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்; சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால் நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும் இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.