5.74 திருஎறும்பியூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1810

விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;-
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

1
உரை
பாடல் எண் :1811

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்-
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

2
உரை
பாடல் எண் :1812

மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை;
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்-
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

3
உரை
பாடல் எண் :1813

நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை;
மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா,
அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

4
உரை
பாடல் எண் :1814

நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான்
உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

5
உரை
பாடல் எண் :1815

கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்;
திறம்பி ஊர்வன மற்றும் பல உள;
குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

6
உரை
பாடல் எண் :1816

மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும்
திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே!
புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

7
உரை
பாடல் எண் :1817

இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு,
துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான்
ழுஅன்பனே, அரனே!ழு என்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.

8
உரை
பாடல் எண் :1818

கண் நிறைந்த கன பவளத்திரள்;
விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்;
உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.

9
உரை
பாடல் எண் :1819

நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட,
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!

10
உரை