5.84 திருக்காட்டுப்பள்ளி
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1900

மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது
ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

1
உரை
பாடல் எண் :1901

மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்!
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

2
உரை
பாடல் எண் :1902

தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே,
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
ஞான நாயகனைச் சென்று நண்ணுமே!

3
உரை
பாடல் எண் :1903

அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி
திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!

4
உரை
பாடல் எண் :1904

ழுசுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும்,
அற்றபோது அணையார், அவர்ழு என்று என்றே,
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே!

5
உரை
பாடல் எண் :1905

அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும்,
துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்;
கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி
உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே.

6
உரை
பாடல் எண் :1906

மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,
பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்!
கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம்
ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே!

7
உரை
பாடல் எண் :1907

வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர்,
சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்!
காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை
நீலகண்டனை நித்தல் நினைமினே!

8
உரை
பாடல் எண் :1908

ழுஇன்று உளார் நாளை இல்லைழு எனும் பொருள்
ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்!
அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!

9
உரை
பாடல் எண் :1909

எண் இலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன்,
கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை
நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.

10
உரை