மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா உகந்து ஏறும் இறைவனார்; கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும் சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே.
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார், அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள், பெரியவன், சிராப்பள்ளியைப் பேணுவார் அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே.
அரிச்சு, இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு, சுரிச்சு இராது,-நெஞ்சே!-ஒன்று சொல்லக் கேள்: திரிச் சிராப்பள்ளி என்றலும், தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.
ழுதாயும் ஆய் எனக்கே, தலை கண்ணும் ஆய், பேயனேனையும் ஆண்ட பெருந்தகை; தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனார்ழு என, நம் வினை நாசமே.