இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்; இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்; இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து, இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.
மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில் மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்; மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்; மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே; புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை; புழுவினும் கடையேன் புனிதன் தமர்- குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?