5.93 பொது
ழுமறக்கிற்பனேழு என்னும் திருக்குறுந்தொகை
பாடல் எண் :1984

காசனை, கனலை, கதிர் மா மணித்-
தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்;
மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே?

1
உரை
பாடல் எண் :1985

புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை,
சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை,
அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை,
வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?

2
உரை
பாடல் எண் :1986

ழுஈசன், ஈசன்ழு என்று என்றும் அரற்றுவன்;
ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்;
ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்),
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

3
உரை
பாடல் எண் :1987

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,-
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,-
ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

4
உரை
பாடல் எண் :1988

தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை,
வான வெண்மதி சூடிய மைந்தனை,
வேனிலானை மெலிவு செய் தீ-அழல்-
ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே?

5
உரை
பாடல் எண் :1989

கன்னலை, கரும்பு ஊறிய தேறலை,
மின்னனை, மின் அனைய உருவனை,
பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய
என்னனை, இனி யான் மறக்கிற்பனே?

6
உரை
பாடல் எண் :1990

கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச்
சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை,
அரும்பினில் பெரும்போது கொண்டு, ஆய் மலர்
விரும்பும் ஈசனை, நான் மறக்கிற்பனே?

7
உரை
பாடல் எண் :1991

துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை,
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை,
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை,
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?

8
உரை
பாடல் எண் :1992

புதிய பூவினை, புண்ணிய நாதனை,
நிதியை, நீதியை, நித்திலக்குன்றினை,
கதியை, கண்டம் கறுத்த கடவுளை,
மதியை, மைந்தனை, நான் மறக்கிற்பனே?

9
உரை
பாடல் எண் :1993

கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை,
உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை,
பருகு பாலனை, பால்மதி சூடியை,
மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?

10
உரை