அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு- முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்- துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.
முத்து ஒப்பானை, முளைத்து எழு கற்பக- வித்து ஒப்பானை, விளக்கு இடை நேர் ஒளி ஒத்து ஒப்பானை, ஒளிர் பவளத்திரள்- தொத்து ஒப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.
பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர் வண்ணத்தானை, வகை உணர்வான் தனை, எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்- சுண்ணத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.
விடலையானை, விரை கமழ் தேன் கொன்றைப்- படலையானை, பலி திரிவான் செலும் நடலையானை, நரி பிரியாதது ஓர் சுடலையானை-கண்டீர்-தொழல்பாலதே.
பரிதியானை, பல்வேறு சமயங்கள் கருதியானை, கண்டார் மனம் மேவிய பிரிதியானை, பிறர் அறியாதது ஓர் சுருதியானை-கண்டீர்-தொழல்பாலதே.
ஆதியானை, அமரர் தொழப்படும் நீதியானை, நியம நெறிகளை ஓதியானை, உணர்தற்கு அரியது ஓர் சோதியானை-கண்டீர்-தொழல்பாலதே.
ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும் கோலத்தானை, குணப்பெருங்குன்றினை, மூலத்தானை, முதல்வனை, மூ இலைச்- சூலத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.
ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும் வேதிப்பானை, நம்மேல் வினை வெந்து அறச் சாதிப்பானை, தவத்து இடை மாற்றங்கள் சோதிப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.
நீற்றினானை, நிகர் இல் வெண்கோவணக்- கீற்றினானை, கிளர் ஒளிச் செஞ்சடை ஆற்றினானை, அமரர்தம் ஆர் உயிர் தோற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.
விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள் கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு- பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம் சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.
முற்றினானை; இராவணன் நீள் முடி ஒற்றினானை, ஒருவிரலால் உற; பற்றினானை, ஓர் வெண்தலை; பாம்பு அரைச் சுற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.