5.100 பொது
ஆதிபுராணத் திருக்குறுந்தொகை
பாடல் எண் :2076

வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.

1
உரை
பாடல் எண் :2077

செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ,
ழுஅத்தன்ழு என்று அரியோடு பிரமனும்
துத்தியம் செய நின்ற நல்சோதியே?

2
உரை
பாடல் எண் :2078

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.

3
உரை
பாடல் எண் :2079

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்!
ழுயாது ஓர் தேவர்ழு எனப்படுவார்க்கு எலாம்
மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே.

4
உரை
பாடல் எண் :2080

கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
ழுகூவலோடு ஒக்குமோ, கடல்?ழு என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.

5
உரை
பாடல் எண் :2081

பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு
ஈவனை, இமையோர் முடி தன் அடிச்
சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல்
சீவனை, சிவனை, சிந்தியார்களே.

6
உரை
பாடல் எண் :2082

எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்;
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே.

7
உரை
பாடல் எண் :2083

அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.

8
உரை
பாடல் எண் :2084

தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்-
ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்-
பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

9
உரை
பாடல் எண் :2085

அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.

10
உரை