| 254 | தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ் புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி; கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும் ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, “உமையாள் மணவாளா!” என்று வாழ்த்தி, “ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்; அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?. |