6.2 கோயில் புக்க
திருத்தாண்டகம்
11மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்;
                               மருகல் உள்ளார்;
கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார்; குடமூக்கின்
              உள்ளார்; போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கும் இடம் அறியார்; சால நாளார்; தருமபுரத்து
                          உள்ளார்; தக்களூரார்-
பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
12நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந் நாள் நனிபள்ளி
                  உள்ளார்; போய் நல்லூர்த் தங்கி
பாகப் பொழுது எலாம் பாசூர்த் தங்கி, பரிதி
                        நியமத்தார், பன்னிரு நாள்;
வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை
                                 எழுநாள்-தங்கி,
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்-புலியூர்ச்
                       சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
13துறம் காட்டி, எல்லாம் விரித்தார் போலும்; தூ மதியும்
                      பாம்பும் உடையார் போலும்;
மறம் காட்டி, மும்மதிலும் எய்தார் போலும்; மந்திரமும்
                        தந்திரமும் தாமேபோலும்;
அறம் காட்டி, அந்தணர்க்கு அன்று ஆலநீழல் அறம்
                 அருளிச்செய்த அரனார்-இந் நாள்,
புறங்காட்டு எரி ஆடிப் பூதம் சூழ, புலியூர்ச்
                     சிற்றம்பலமே புக்கார் தாமே.
உரை
   
14வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை
                          ஏந்தி, மயானத்து ஆடி,
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு
                  வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்;
கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு
                நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்-
போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
15கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கபாலம்
                       கை ஏந்தி, கணங்கள் பாட,
ஊரார் இடு பிச்சை கொண்டு, உழ(ல்)லும் உத்தமராய்
                           நின்ற ஒருவனார்தாம்:
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர்; திரு ஆரூர்த்
                      திரு மூலட்டானம் மேயார்-
போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
16காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்;
               கயிலாயமாமலையார்; காரோணத்தார்;
மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும்
                                 தாமே போலும்;
மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன்
                       உடலம் காய்ந்தார்-இந்நாள்
போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார் தாமே.
உரை
   
17இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும்
        இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்;
                    தன் பெருமையே பேச நின்று,
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்;
        மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்-
புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
18குலா வெண்தலைமாலை என்பு பூண்டு, குளிர்
         கொன்றைத்தார் அணிந்து, கொல் ஏறு ஏறி,
கலா வெங்களிற்று உரிவைப்போர்வை மூடி, கை ஓடு
                    அனல் ஏந்தி, காடு உறைவார்;
நிலா வெண்மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல்
                சூழ் நெய்த்தானம் மேய செல்வர்-
புலா வெண்தலை ஏந்திப் பூதம் சூழ, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
19சந்தித்த கோவணத்தர், வெண் நூல் மார்பர்;
      சங்கரனைக் கண்டீரோ? கண்டோம்-இந் நாள்,
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி, படுதலையில்
                  என்கொலோ ஏந்திக் கொண்டு,
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம்,
      மணி ஆரூர் நின்று, அந்தி கொள்ளக்கொள்ள,
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
20பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி
                       செய்யும் தொண்டர்தங்கள்
ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள்
                           உடைய ஈசனார்தாம்-
வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று
                            தாம் ஏறி, வேதகீதர்,
பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார்தாமே.
உரை
   
21பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று
       ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச்
              சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்;
விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே;
              ஓதுவதும் வேதமே; வீணை உண்டே;
கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர்
                     மிடற்று எம் கபாலியார்க்கே.
உரை