தொடக்கம் |
|
|
6.6 திருஅதிகை வீரட்டானம் திருவடித் திருத்தாண்டகம் |
54 | அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி; அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி; சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி; சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி; பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி; பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி; திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி- திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி. |
|
உரை
|
|
|
|
|
55 | கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்து அடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி; படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி; பதைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி; கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி; கடல் வையம் காப்பான் கருதும்(ம்) அடி; நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி- நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி. |
|
உரை
|
|
|
|
|
56 | வைது எழுவார் காமம், பொய், போகா அடி; வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி; கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி; கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி; நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி; தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி; |
|
உரை
|
|
|
|
|
57 | அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி; அழகு எழுதல் ஆகா அருள் சேவடி; சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி; சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி; பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி; பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி; திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி |
|
உரை
|
|
|
|
|
58 | ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி; ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி; பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி; இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி; இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி; திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி. |
|
உரை
|
|
|
|
|
59 | திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி; சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி; பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்) அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி; உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி; உரு என்று உணரப்படாத(வ்)அடி; திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி. |
|
உரை
|
|
|
|
|
60 | உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால் உணரப்படாத(வ்) அடி; வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி; அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம் அளக்கிற்பார் இல்லா அடி; கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி-கமழ் வீரட்டானக் காபாலி(ய்) அடி; |
|
உரை
|
|
|
|
|
61 | நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி; நடு ஆய் உலகம் நாடு ஆய(வ்) அடி; செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி; தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி; மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி; மந்திரமும் தந்திரமும் ஆய(வ்) அடி; செறி கெடில நாடர் பெருமான் அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி. |
|
உரை
|
|
|
|
|
62 | அணியனவும் சேயனவும் அல்லா அடி; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி; பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி; பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி; மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி; மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி; தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி-தகை சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி; |
|
உரை
|
|
|
|
|
63 | அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி; அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி; முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி; பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி; பவளத்தடவரையே போல்வான் அடி; வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம் காதல் விமலன்(ன்) அடி. |
|
உரை
|
|
|
|