தொடக்கம் |
|
|
6.15 திருக்கருகாவூர் திருத்தாண்டகம் |
148 | குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்; பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்; ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்; கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
149 | வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்; வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்; பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்; தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத் தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
150 | பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்; பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி, ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
151 | இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண் திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்; அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்; ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும் குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
152 | படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்; உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்) அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம் அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்; கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
153 | மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்; மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்; சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்; மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம் காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
154 | அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்; ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர் திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை நாசன், என் சிந்தையான் ஆம்; உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்; உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக் கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
155 | துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்; சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்; படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால் நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்; கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே. |
|
உரை
|
|
|
|
|
156 | விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்; விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்; பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்; பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்; எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்; என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்; கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
157 | பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள் இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய், செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்; அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி; கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|
|
158 | ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி; உடனே வைத்து(வ்) இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்; இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்; அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்; கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |
|
உரை
|
|
|
|