தொடக்கம் |
|
|
6.17 திருஇடைமருது திருத்தாண்டகம் |
169 | ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்; படை உடையர்; அம் பொன்தோள் மேல் நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம் பலி கொள்வர்; மொய்த்த பூதம் கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள் தால வேடத்தர்; கொள்கை சொல்லின், ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
170 | மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான் இடம் உடையர்; மாதராளைப் பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்; பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்; சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்; சரிதை பல உடையர்; தன்மை சொல்லின், எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
171 | ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்; காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்; கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு; கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்; கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்; ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
172 | தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்; திரு ஆரூர் என்றும் உள்ளார்; வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்; மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்; நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும் ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
173 | கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்; தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள் சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம் இரப்பர்; எமை ஆள்வர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
174 | கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர் கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்; அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார்; அமரர் போற்ற இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
175 | பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்; பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்; கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று கை ஏந்தி, இல்லம் தோறும் பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு சடைமுடியர்; பேணும் தொண்டர் இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
176 | கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம் மன்னினார்; பன்னும் இன்சொல் பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்; பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம் மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
177 | புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில் பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில் எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ் இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால் இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
178 | விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்; மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்; மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்; சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால் இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|