தொடக்கம் |
|
|
6.22 திருநாகைக்காரோணம் திருத்தாண்டகம் |
221 | பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை, பைஞ்ஞீலியானை, சீரார் செழும் பவளக்குன்று ஒப்பானை, திகழும் திருமுடிமேல்-திங்கள் சூடிப் பேர் ஆயிரம் உடைய பெம்மான் தன்னை, பிறர் தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னை,- கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
222 | விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை, பெண்ணானை, ஆணானை, பேடியானை, பெரும்பற்றாத்தண் புலியூர் பேணினானை, அண்ணாமலையானை, ஆன் ஐந்துஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னை, கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
223 | சிறை ஆர் வரிவண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோக(ன்)னை, மறை ஆன்ற வாய் மூரும் கீழ் வேளூரும் வலி வலமும் தேவூரும் மன்னி அங்கே உறைவானை, உத்தமனை, ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன் தன்னை,- கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
224 | அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை, ஆச்சிராம(ந்) நகரும் ஆனைக்காவும், முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை, மூ உலகும் தான் ஆய மூர்த்தி தன்னை, சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினானை,- கன்னி அம்புன்னை சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
225 | நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான் தன்னை; ஞானப் பெருங்கடலை; நல்லூர் மேய, படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை; பன்மையே பேசும் படிறன் தன்னை; மடை இடையே வாளை உகளும் பொய்கை மருகல் வாய்ச் சோதி மணி கண்ட(ன்)னை;- கடை உடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
226 | புலம் கொள் பூந் தேறல் வாய்ப் புகலிக் கோனை; பூம்புகார்க் கற்பகத்தை; புன்கூர் மேய, அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை அவிர் சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை; இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன் தன்னை;- கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
227 | பொன் மணி அம் பூங்கொன்றை மாலையானை, புண்ணியனை, வெண் நீறு பூசினானை, சில்மணிய மூ இலைய சூலத்தானை, தென் சிராப்பள்ளிச் சிவலோக(ன்)னை, மன் மணியை, வான் சுடலை ஊராப் பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை,- கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
228 | வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தினானை, விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை, புண் தலைய மால்யானை உரி போர்த்தானை, புண்ணியனை, வெண் நீறு அணிந்தான் தன்னை எண் திசையும் எரி ஆட வல்லான் தன்னை, ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னை,- கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
229 | சொல் ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னை; தொல்-நரகம் நன்நெறியால்-தூர்ப்பான் தன்னை; வில்லானை; மீயச்சூர் மேவினானை, வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி, பொல்லாதார் தம் அரணம் மூன்றும் பொன்ற, பொறி அரவம் மார்பு ஆரப் பூண்டான் தன்னை; கல்லாலின் கீழானை;- கழி சூழ் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
230 | மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும், மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும், சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும், மெய் என்று கருதாதே, போத, -நெஞ்சே!- பனைஉரியைத் தன் உடலில் போர்த்த எந்தை-அவன் பற்றே பற்று ஆகக் காணின் அல்லால், கனைகடலின் தெண்கழி சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே?. |
|
உரை
|
|
|
|
|
231 | நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற படியானை, பாம்புரமே காதலானை, பாம்பு அரையோடு ஆர்த்த படிறன் தன்னை, செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,- கடி நாறு பூஞ்சோலை அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |
|
உரை
|
|
|
|