தொடக்கம் |
|
|
6.23 திருமறைக்காடு திருத்தாண்டகம் |
232 | தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய்; தொல் அமரர் சூளா மணிதான் கண்டாய்; காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்; வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்; மெய்ந் நெறி கண்டாய்; விரதம் எல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
233 | கை கிளரும் வீணை வலவன் கண்டாய்; காபாலி கண்டாய்; திகழும் சோதி மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய்; மெய் அடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்; பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்; பராபரன் கண்டாய்; பாசூரான் கண்டாய்; வை கிளரும் கூர்வாள் படையான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
234 | சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய்; திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்; நிலம், துக்கம், நீர், வளி, தீ, ஆனான் கண்டாய்; நிரூபியாய் ரூபியும் ஆய் நின்றான் கண்டாய்; சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய்; தாமரையான், செங்கண் மால், தானே கண்டாய்; மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
235 | கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்; காலனையும் காலால் கடந்தான் கண்டாய்; புள்ளி உழை மானின் தோலான் கண்டாய்; புலி உரி சேர் ஆடைப் புனிதன் கண்டாய்; வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்; வெண் நீற்றான் கண்டாய்; நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
236 | மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்; முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்; ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்; இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்; ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்; அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்; வாரி மத களிறே போல்வான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
237 | ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்; அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்; கோடியான் கண்டாய்; குழகன் கண்டாய்; குளிர் ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்; நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்; நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
238 | வேலை சேர் நஞ்சம், மிடற்றான் கண்டாய்; விண் தடவு பூங் கயிலை வெற்பன் கண்டாய்; ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய்; அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்; பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய்; பருப்பதத் தான் கண்டாய்; பரவை மேனி மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
239 | அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்; அம் தேன் தெளிகண்டாய்; ஆக்கம் செய்திட்டு இம்மை பயக்கும் இறைவன் கண்டாய்; என் நெஞ்சே! உன்னில் இனியான் கண்டாய்; மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்; வெண் காடன் கண்டாய்; வினைகள் போக மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
240 | மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்; முத்தமிழும் நால்மறையும் ஆனான் கண்டாய்; ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்; ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்; பால விருத்தனும் ஆனான் கண்டாய்; பவளத் தடவரையே போல்வான் கண்டாய்; மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
241 | அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம், ஆர் அழல் ஆய் நீண்டு, உகந்த அண்ணல் கண்டாய்; துயர் இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்; பெயர் அ(அ)வற்குப் பேர் அருள்கள் செய்தான் கண்டாய்; பேரும், பெரும் படையோடும், ஈந்தான் கண்டாய்; மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|