6.26 திருஆரூர்
திருத்தாண்டகம்
263பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை,
      பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை,
வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை,
   வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை,
சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை,
    சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை,
ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை, 
      -ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
உரை
   
264வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை;
    விளக்கின் ஒளி, மின்னின் ஒளி, முத்தின் சோதி,
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்தன்னை;
             ஓதாதே வேதம் உணர்ந்தான்தன்னை;
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்தன்னை,
     அமுது உண்டார் உலந்தாலும் உலவா தானை-
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை;-
      ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
உரை
   
265ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை,
               ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை,
வருகாலம் செல்காலம் ஆயினானை, வன்
            கருப்புச்சிலைக் காமன் உடல் அட்டானை,
பொரு வேழக்-களிற்று உரிவைப் போர்வையானை,
    புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை,
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை,-
          ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
உரை
   
266மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை,
      வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை,
ஒப்பானை, ஒப்பு இலா ஒருவன் தன்னை,
         உத்தமனை, நித்திலத்தை, உலகம் எல்லாம்
வைப்பானை, களைவானை, வருவிப்பானை,
    வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை,
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை,-
       ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
உரை
   
267பிண்டத்தில் பிறந்தது ஒரு பொருளை; மற்றைப்
       பிண்டத்தைப் படைத்தானை; பெரிய வேதத்-
துண்டத்தில்-துணி பொருளை; சுடுதீ ஆகி, சுழல்
        கால் ஆய், நீர் ஆகி, பார் ஆய், இற்றைக்
கண்டத்தில்-தீதின் நஞ்சு அமுதுசெய்து
      கண்மூன்று படைத்தது ஒரு கரும்பை; பாலை;
அண்டத்துக்கு அப் புறத்தார் தமக்கு வித்தை;-
      ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
உரை
   
268நீதிஆய், நிலன் ஆகி, நெருப்பு ஆய், நீர் ஆய்,
        நிறை கால் ஆய், இவையிற்றின் நியமம் ஆகி,
பாதிஆய், ஒன்று ஆகி, இரண்டு ஆய், மூன்று
         ஆய், பரமாணு ஆய், பழுத்த பண்கள் ஆகி,
சோதி ஆய், இருள் ஆகி, சுவைகள் ஆகி. சுவை
          கலந்த அப்பால் ஆய், வீடு ஆய், வீட்டின்
ஆதி ஆய் அந்தம் ஆய், நின்றான் தன்னை-
        ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
உரை