தொடக்கம் |
|
|
6.28 திருஆரூர் திருத்தாண்டகம் |
279 | நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்; காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்; கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்; கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்; கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்; ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
280 | பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்; பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்; கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்; காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்; பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்; பேர் நந்தி என்னும் பெயரார்போலும்; அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
281 | துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்; தூய திருமேனிச் செல்வர்போலும்; பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்; பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்; மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்; வாசுகி மா நாணாக வைத்தார் போலும்; அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
282 | ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்; ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்; நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்; காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்; காமரங்கள் பாடித் திரிவார்போலும்; ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும் அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
283 | ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்; இமையவர்கள் ஏத்த இருந்தார்போலும்; கானக் கல்லால்கீழ் நிழலார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்; வானத்து இளமதி சேர் சடையார்போலும்; வான் கயிலைவெற்பில் மகிழ்ந்தார்போலும்; ஆனத்து முன் எழுத்து ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
284 | காமனையும் கரி ஆகக் காய்ந்தார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்; சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்; சொல் ஆகிச் சொல்பொருள் ஆய் நின்றார்போலும்; நா மனையும் வேதத்தார் தாமேபோலும்; நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர்போலும்; ஆ(ம்)மனையும் திருமுடியார் தாமேபோலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
285 | முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்; மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்; செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்; செல் கதிதான் கண்ட சிவனார்போலும்; கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்; கங்காளவேடக் கருத்தர்போலும்; அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
286 | இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்; இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர்போலும்; சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார்போலும்; தூத் தூய திருமேனித் தோன்றல்போலும்; மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்போலும்; மா நாகம் நாண் ஆக, வளைத்தார்போலும்; அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
287 | பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்; பிறவி, இறவி, இலாதார்போலும்; முண்டத்து முக்கண் உடையார்போலும்; முழுநீறு பூசும் முதல்வர்போலும்; கண்டத்து இறையே கறுத்தார்போலும்; காளத்தி, காரோணம், மேயார்போலும்; அண்டத்துக்கு அப்புறம் ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
288 | ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்; ஊழிபல கண்டு இருந்தார்போலும்; பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்; பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்; உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்; உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்; அருகு ஆக வந்து என்னை, “அஞ்சல்!” என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|
|
289 | நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்; கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார்போலும்; கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார்போலும்; சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார்போலும்; திசை அனைத்தும் ஆய், அனைத்தும் ஆனார்போலும்; அன்று ஆகில், ஆயிரம் பேரார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |
|
உரை
|
|
|
|