தொடக்கம் |
|
|
6.29 திருஆரூர் திருத்தாண்டகம் |
290 | திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல், குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை, பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை, பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும் அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
291 | பொன்னே போல்-திருமேனி உடையான்தன்னை, பொங்கு வெண்நூலானை, புனிதன்தன்னை, மின்னானை, மின் இடையாள் பாகன்தன்னை, வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான்தன்னை, தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தத்துவனை, உத்தமனை, தழல் போல் மேனி அன்னானை, ஆரூரில் அம்மான்தன்னை- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
292 | ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை, ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்தன்னை, கூற்றானை, கூற்றம் உதைத்தான்தன்னை, கொடுமழுவாள் கொண்டது ஓர் கையான்தன்னை, காற்றானை, தீயானை, நீரும் ஆகி, கடி கமழும் புன்சடைமேல் கங்கைவெள்ள- ஆற்றானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
293 | முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை, மூவாத மேனி முக்கண்ணினானை, சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை, சங்கரனை, சங்கக் குழையான்தன்னை, மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்தன்னை, மறுமையும் இம்மையும் ஆனான்தன்னை, அம் திரனை, ஆரூரில் அம்மான்தன்னை, -அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
294 | பிற நெறி ஆய், பீடு ஆகி, பிஞ்ஞகனும் ஆய், பித்தனாய், பத்தர் மனத்தினுள்ளே உற நெறி ஆய், ஓமம் ஆய், ஈமக்காட்டில், ஓரிபல விட, நட்டம் ஆடினானை; துறநெறி ஆய், தூபம் ஆய், தோற்றம் ஆகி, நாற்றம் ஆய், நல் மலர்மேல் உறையா நின்ற அறநெறியை; ஆரூரில் அம்மான்தன்னை;- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
295 | பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை, பாவகனை, பாவம் தீர்க்கும் குழகனை, கோள் அரவு ஒன்று ஆட்டுவானை, கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்தன்னை, விழவனை, வீரட்டம் மேவினானை, விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை, அழகனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
296 | சூளாமணி சேர் முடியான்தன்னை, சுண்ணவெண்நீறு அணிந்த சோதியானை, கோள் வாய் அரவம் அசைத்தான்தன்னை, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை, நாள் வாயும் பத்தர் மனத்து உளானை, நம்பனை, நக்கனை, முக்கணானை, ஆள்வானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
297 | முத்தினை, மணிதன்னை, மாணிக்கத்தை, மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னை, கொத்தினை, வயிரத்தை, கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்தன்னை, பத்தனை, பத்தர் மனத்து உளானை, பரிதி போல்-திருமேனி உடையான்தன்னை, அத்தனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
298 | பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி போல்-திருமேனிப் பால்நீற்றானை, நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை, நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை, செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை, செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை, ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
299 | சீர் ஆர் முடிபத்து உடையான்தன்னைத் தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப் பேர் ஆர் பெருமை கொடுத்தான்தன்னை, பெண் இரண்டும் ஆணும் ஆய் நின்றான் தன்னை, போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை, வெண்நீறு அணிந்தான்தன்னை, ஆரானை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |
|
உரை
|
|
|
|