தொடக்கம் |
|
|
6.30 திருஆரூர் திருத்தாண்டகம் |
300 | எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்; வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்; வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட, அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்; அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்- செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |
|
உரை
|
|
|
|
|
301 | அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும் ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்; கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை, குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித் தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும் தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும், திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |
|
உரை
|
|
|
|
|
302 | நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்; வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்; வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்; கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்; கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்- சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே. |
|
உரை
|
|
|
|
|
303 | கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்; கற்பகம்காண்; காலனை அன்று உதைசெய்தான்காண்; ஊன் ஏறும் உடைதலையில் பலி கொள்வான்காண்; உத்தமன்காண்; ஒற்றியூர் மேவினான்காண்; ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல் தான்காண்; ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான்காண்- தேன் ஏறு மலர்ச்சோலைத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே. |
|
உரை
|
|
|
|
|
304 | பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்; பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான்காண்; மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான்காண்; வானவரும் அறியாத நெறி தந்தான் காண்- நறப் படு பூ மலர், தூபம், தீபம், நல்ல நறுஞ்சாந்தம், கொண்டு ஏத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே. |
|
உரை
|
|
|
|
|
305 | சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்; தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்; அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன்காண்; அணி பொழில் சூழ் ஐயாற்றான்காண்; எங்கள் பெருமான்காண்; என் இடர்கள் போக அருள் செய்யும் இறைவன்காண்- இமையோர் ஏத்தும் செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |
|
உரை
|
|
|
|
|
306 | நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்; நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்; மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்; வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்; துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்; சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |
|
உரை
|
|
|
|
|
307 | பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்; புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்; மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்; வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்; கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்; கோலமா நீறு அணிந்த மேனியான்காண்- செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |
|
உரை
|
|
|
|
|
308 | விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான்காண்; வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான்காண்; மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான்காண்; வாய் மூரும் மறைக்காடும், மருவினான் காண்; புண்டரிகக் கண்ணானும், பூவின்மேலைப் புத்தேளும், காண்பு அரிய புராணன் தான்காண்- தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |
|
உரை
|
|
|
|
|
309 | செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்; தென் ஆனைக்காவன்காண்; தீயில் வீழ, மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்; வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்; அரு வரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும், ஐந் நான்கு தோளும், நெரிந்து அலற அன்று திருவிரலால் அடர்த்தவன்காண்-திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |
|
உரை
|
|
|
|