தொடக்கம் |
|
|
6.38 திருஐயாறு திருத்தாண்டகம் |
380 | ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே; வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே; பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
381 | நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே நோக்கு அருள வல்லாய், நீயே; காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும் கண் அழலால் காய்ந்தாய், நீயே; ஆர்ப்ப(அ)ரிய மா நாகம் ஆர்த்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே; தீர்ப்ப (அ)ரிய வல்வினை நோய் தீர்ப்பாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
382 | கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே; கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே; தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே; சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே; மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே; மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே; சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
383 | வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை மன்னி இருந்தாய், நீயே; ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே; ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; “அடியான்” என்று அடி என்மேல் வைத்தாய், நீயே; தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
384 | பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே; பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே; உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி முதல்வனாய் நின்றாய், நீயே; கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே; கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
385 | உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே; உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே; கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே; பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
386 | எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி இருந்தாய், நீயே; நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர் விளக்கு ஆய் நின்றாய், நீயே; பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே; செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
387 | ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல் பெருமை உடையாய், நீயே; பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே; நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி என்மேல் வைத்தாய், நீயே; தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
388 | எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே; ஏகம்பம் மேய இறைவன், நீயே; வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே; வாரா உலகு அருள வல்லாய், நீயே; தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
389 | விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே; விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே; கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே; காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே; தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|
|
390 | ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர் ஊர வல்லாய், நீயே; பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து இறுத்தாய், நீயே; ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண் தாமரையானும் மாலும் கூடித் தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |
|
உரை
|
|
|
|