தொடக்கம் |
|
|
6.51 திருவீழிமிழலை திருத்தாண்டகம் |
509 | கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; கந்த மாதனத்து உளார்; காளத்தி(ய்)யார்; மயிலாடு துறை உளார்; மாகாளத்தார்; வக்கரையார்; சக்கரம் மாற்கு ஈந்தார்; வாய்ந்த அயில்வாய சூலமும், காபால(ம்)மும், அமரும் திருக்கரத்தார்; ஆன் ஏறு ஏறி, வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
510 | பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு அரவர்; சங்கரர்; வெண்குழை ஓர் காதர்; கேதிசரம் மேவினார்; கேதாரத்தார்; கெடில வட அதிகை வீரட்டத்தார்; மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார்; மழபாடி மேய மணவாள(ன்)னார்; வேதி குடி உளார்; மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
511 | அண்ணாமலை அமர்ந்தார்; ஆரூர் உள்ளார்; அளப்பூரார்; அந்தணர்கள் மாடக்கோயில் உண்ணாழிகையார், உமையாளோடும்; இமையோர் பெருமானார்; ஒற்றியூரார்; பெண்ணா கடத்துப் பெருந் தூங்கானை-மாடத்தார்; கூடத்தார்; பேராவூரார் விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
512 | வெண்காட்டார்; செங்காட்டங்குடியார்; வெண்ணி நன்நகரார்; வேட்களத்தார்; வேதம் நாவார்; பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார்; பராய்த்துறையார்; சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்து, உரிவை போர்த்த விடலை வேடம் விண் காட்டும் பிறை நுதலி அஞ்சக் காட்டி, வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
513 | புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே நடம் ஆடு(வ்)வார்; உடை சூழ்ந்த புலித்தோலர்; கலிக் கச்சி(ம்) மேற்-றளி உளார்; குளிர்சோலை ஏகம்பத்தார்; கடை சூழ்ந்து பலி தேரும் கங்காள(ன்)னார்; கழுமலத்தார்; செழு மலர்த்தார்க் குழலியோடும் விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
514 | பெரும் புலியூர் விரும்பினார்; பெரும் பாழி(ய்)யார்; பெரும் பற்றப்புலியூர் மூலட்டானத்தார்; இரும்புதலார்; இரும்பூளை உள்ளார்; ஏர் ஆர் இன்னம்பரார்; ஈங்கோய் மலையார்; இன்சொல் கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார்; கருப்பறியலூரார்; கரவீரத்தார் விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
515 | மறைக்காட்டார்; வலிவலத்தார்; வாய்மூர் மேயார்; வாழ்கொளி புத்தூரார்; மாகாளத்தார்; கறை(க்)க்காட்டும் கண்டனார்; காபாலி(ய்)யார்; கற்குடியார்; விற்குடியார்; கானப்பேரார்; பறை(க்)க்காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப் பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் மிறை(க்)க்காட்டும் கொடுங் காலன் வீடப் பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
516 | அஞ்சைக்களத்து உள்ளார்; ஐயாற்று உள்ளார்; ஆரூரார்; பேரூரார்; அழுந்தூர் உள்ளார்; தஞ்சைத் தளிக்குளத்தார்; தக்களூரார்; சாந்தை அயவந்தி தங்கினார் தாம்; நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்; நாகேச்சுரத்து உள்ளார்; நாரையூரார்; வெஞ்சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
517 | கொண்டல் உள்ளார்; கொண்டீச்சுரத்தின் உள்ளார்; கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார்; தண்டலையார்; தலையாலங்காட்டில் உள்ளார்; தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கினார் தாம்; வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நன்நீர் வலஞ்சுழியார்; வைகலில் மேல்மாடத்து உள்ளார்; வெண்தலை கைக் கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
518 | அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்; புரிச்சந்திரத்து உள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்பு அரையன் மகளோடு விருப்பர் ஆகி எரிச் சந்தி வேட்கும் இடத்தார்; ஏம-கூடத்தார் பாடத் தேன் இசை ஆர் கீதர்; விரிச்சு அங்கை எரிக் கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|
|
519 | புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்; புலிவலத்தார்; வலியின் மிக்க தன் கூர்மை கருதி வரை எடுக்கல் உற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி, பொருப்பு அதன் கீழ் நெரித்து, அருள்செய் புவன நாதர்; மின் கூரும் சடைமுடியார்; விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே. |
|
உரை
|
|
|
|