6.73 திருவலஞ்சுழியும்,
திருக்கொட்டையூர்க் கோடீச்சுரமும்
திருத்தாண்டகம்
724கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;
             கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்;
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்;
               பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;
வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
                மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில்
              கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
725கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை
           பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்;
அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான
     கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்;
மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி
              வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில்
               கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
726செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன்
               கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்;
பந்து ஆடு மெல் விரலாள் பாகன் கண்டாய்;
          பாலோடு, நெய், தயிர், தேன், ஆடி கண்டாய்;
மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி
            வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
              கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
727பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள்
               பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்;
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்;
    எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்;
மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய்
            வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில்
             கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
728அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய்;
           அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய்; சதாசிவன்
                 காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்;
மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி
              வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில்
                கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
729சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்;
              சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்;
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர்
      ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்;
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா
                     முனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில்
                  கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
730அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்;
          அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்;
பண மணி மா நாகம் உடையான் கண்டாய்;
             பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்;
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்
   கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில்
              கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
731விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான்
    கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்;
அரை அதனில் புள்ளி அதள் உடையான்
    கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்;
வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
        வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
             கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
732தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்;
      தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்;
இளம்பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய்;
        எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான் கண்டாய்;
வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
    மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
               கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை
   
733விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில்
          வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்;
தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு
                    ஆய் நீண்ட கழலான் கண்டாய்;
வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்;
             மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
            கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
உரை