தொடக்கம் |
|
|
6.89 திருஇன்னம்பர் திருத்தாண்டகம் |
878 | அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்; சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்; வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்; எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
879 | கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்; ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்; ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்; ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
880 | தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ நெறி ஆய் நின்றார் போலும்; பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்; இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
881 | வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்; ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்; தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும்; ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
882 | சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதி ஆய் நின்றார் போலும்; ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த அழகர் போலும்; தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு, தன்மை அளித்த தலைவர் போலும்; ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
883 | பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்; பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர் போலும்; வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித் திரியும் தொண்டர் ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
884 | பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்; பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்; எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
885 | மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார் போலும்; கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள் கழிப்பார் போலும்; நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர், வெளி, கால், ஆனார் போலும்; எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
886 | கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து, அளித்த கள்வர் போலும்; செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும்; மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி வணங்கல் உற்ற இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
887 | அலங்கல் சடை தாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும்; வலங்கை மழு ஒன்று உடையார் போலும்; வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்; விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து, மெய்ஞ்ஞரம்பால் கீதம் கேட்டு, அன்று, இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |
|
உரை
|
|
|
|