6.96 பொது
தனித்திருத்தாண்டகம்
940ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை
                       வீரட்டானம் ஆட்சி கொண்டார்;
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை
         அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம்
            கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்;
காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி;
               கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.
உரை
   
941முப்புரி நூல் வரை மார்பில் முயங்கக் கொண்டார்;
           முது கேழல் முளை மருப்பும் கொண்டார், பூணா;
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார்;
                செம்மேனி வெண் நீறு திகழக் கொண்டார்;
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார்; சுடர்
          முடி சூழ்ந்து, அடி அமரர் தொழவும் கொண்டார்;
அப் பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார்
                  அடியேனை ஆள் உடைய அடிகளாரே.
உரை
   
942முடி கொண்டார்; முளை இள வெண் திங்களோடு மூசும் இள
                       நாகம் உடன் ஆகக் கொண்டார்;
அடி கொண்டார், சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத
                     முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்;
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கைக் கொண்டார்;
                 மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்;
துடி கொண்டார்; கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை
                    தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே.
உரை
   
943பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்;
                   பூதப்படைகள் புடை சூழக் கொண்டார்;
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார்; அனைத்து
         உலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்;
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்;
        கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்;
செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை
                           ஆட்கொண்ட சிவனார் தாமே.
உரை
   
944அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்; அரு
              மறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்;
சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு
                        நடம் ஆடும் இடமாக் கொண்டார்;
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார்;
                மாகாளன் வாசல் காப்பு ஆகக் கொண்டார்;
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண்
             தீர்த்து என் தன்னை ஆட் கொண்டார் தாமே.
உரை
   
945பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்; பவள நிறம்
                        கொண்டார்; பளிங்கும் கொண்டார்;
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார்;
              நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்;
வார் அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்து இட்ட
                    பலி கொண்டார்; வளையும் கொண்டார்;
ஊர் அடங்க, ஒற்றி நகர் பற்றிக் கொண்டார் உடல் உறு
                 நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.
உரை
   
946அணி தில்லை அம்பலம் ஆடு அரங்காக் கொண்டார்; ஆலால
                        அரு நஞ்சம் அமுதாக் கொண்டார்;
கணி வளர் தார்ப் பொன் இதழிக் கமழ்தார் கொண்டார்; காதல்
                  ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார்;
மணி பணத்த அரவம் தோள்வளையாக் கொண்டார்; மால் விடை
                       மேல் நெடுவீதி போதக் கொண்டார்;
துணி புலித்தோலினை ஆடை உடையாக் கொண்டார்; சூலம்
           கைக் கொண்டார் தொண்டு எனைக் கொண்டாரே.
உரை
   
947பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன்,
              என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்;
குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று
               உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்;
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத
                            பாவிகளை நீங்கக் கொண்டார்;
இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே;
           என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.
உரை
   
948எச்சன் இணை தலை கொண்டார்; பகன் கண் கொண்டார்;
              இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்;
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்; விறல்
                   அங்கி கரம் கொண்டார்; வேள்வி காத்து,
உச்ச நமன் தாள் அறுத்தார்; சந்திரனை உதைத்தார்;
              உணர்வு இலாத் தக்கன் தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக் கொண்டு, அருளும் செய்தார்
                 அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே.
உரை
   
949சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின்
                       இசை வீணை தடவிக் கொண்டார்;
உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார்
                       உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;
கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால
                            வேடம் கருதிக் கொண்டார்;
விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார்
            வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.
உரை
   
950குரா மலரோடு, அரா, மதியம், சடை மேல் கொண்டார்;
               குடமுழ, நந்தீசனை, வாசகனாக் கொண்டார்;
சிராமலை தம் சேர்வு இடமாத் திருந்தக் கொண்டார்;
        தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்;
பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்; பருப்பதம்
                       கைக்கொண்டார்; பயங்கள் பண்ணி
இராவணன் என்று அவனைப் பேர் இயம்பக் கொண்டார்
        இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.
உரை