தொடக்கம் |
|
|
6.98 பொது மறுமாற்றத் திருத்தாண்டகம் |
962 | நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்; இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை; தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன், நல் சங்க வெண்குழை ஓர் காதின் கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க் கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே. |
|
962
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
963 | அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும் அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்; புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே; இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்; இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்; துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே. |
|
963
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
964 | வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்; “மாதேவா! மாதேவா!” என்று வாழ்த்தி, நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்; கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்; பார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே. |
|
964
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
965 | உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்; உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே; செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும் நன்மை ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்; நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்; சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர் நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே. |
|
965
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
966 | என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்; இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை; சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்; சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்; ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே; உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்; பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே. |
|
966
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
967 | “மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்- "தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும் நா உடையார் நமை ஆள உடையார் அன்றே; நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே. |
|
967
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
968 | நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும், நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி, அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத் தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர் பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே. |
|
968
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
969 | ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை, இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?. |
|
969
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
970 | சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்; சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி, விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை, வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்; உம்மோடு மற்றும் உளராய் நின்ற படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்; பாசம் அற வீசும் படியோம், நாமே. |
|
970
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|
|
971 | நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்; “ஆவா!” என்று எமை ஆள்வான், அமரர் நாதன், அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து, கோ ஆடி, “குற்றேவல் செய்கு” என்றாலும், குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே. |
|
971
பதிவிறக்கம் செய்ய
உரை
|
|
|
|