Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.31 திருஇடையாற்றுத் தொகை
கொல்லி
1முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம்,
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர்,
பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி,
எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே.
உரை
   
3கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம்,
விடங்களூர், திரு வெண்ணி, அண்ணாமலை, வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான், பரஞ்சோதி,
இடம் கொள் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
5நிறையனூர், நின்றியூர், கொடுங்குன்றம், அமர்ந்த
பிறையனூர், பெருமூர், பெரும்பற்றப் புலியூர்,
மறையனூர், மறைக்காடு, வலஞ்சுழி, வாய்த்த
இறையனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
7கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன்,
தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல்
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி,
இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
9பேறனூர், பிறைச் சென்னியினான்-பெருவேளூர்,
தேறனூர், திருமாமகள் கோன் திருமால் ஓர்-
கூறன்-ஊர் குரங்காடு துறை, திருக்கோவல்,
ஏறனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
10ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே.
உரை