தொடக்கம் |
|
|
7.12 திருநாட்டுத்தொகை இந்தளம் |
1 | வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான், கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே . |
|
உரை
|
|
|
|
|
2 | அண்டத்து அண்டத்தின் அப் புறத்து ஆடும் அமுதன் ஊர் தண்டந் தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை, கடற்கரை, கொண்டல் நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கையே . |
|
உரை
|
|
|
|
|
3 | மூலனூர், முதல் ஆய முக்கண்ணன்-முதல்வனூர், நாலனூர், நரை ஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர் கோலம் நீற்றன்-குற்றாலம், குரங்கணில் முட்டமும், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே . |
|
உரை
|
|
|
|
|
4 | தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி, பாங்கு ஊர், எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை, பூங்கூரும், பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே . |
|
உரை
|
|
|
|
|
5 | குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறன் ஆம், மழலை ஏற்று, மணாளன் இடம் தடமால்வரைக் கிழவன்-கீழை வழி, பழையாறு, கிழையமும், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலையே . |
|
உரை
|
|
|
|
|
6 | தென்னூர், கைம்மைத் திருச் சுழியல்,-திருக்கானப்பேர், பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம் என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசையே . |
|
உரை
|
|
|
|
|
7 | ஈழ நாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம், சோழ நாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய கீழையில், அரனார்க்கு இடம் கிள்ளி குடி அதே . |
|
உரை
|
|
|
|
|
8 | நாளும் நன்னிலம், தென் பனையூர், வட கஞ்சனூர், நீள நீள் சடையான் நெல்லிக்காவு, நெடுங்களம், காள கண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர், வேளார் நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூரே . |
|
உரை
|
|
|
|
|
9 | தழலும் மேனியன், தையல் ஓர்பாகம் அமர்ந்தவன், தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை கழலும் கோவை உடையவன், காதலிக்கும்(ம்) இடம் பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கையே . |
|
உரை
|
|
|
|
|
10 | மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி பை கொள் வாள் அரவு ஆட்டித் திரியும் பரமன், ஊர் செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திருப் புன்கூர், நன்று ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே . |
|
உரை
|
|
|
|
|
11 | பேணி நாடு அதனில்-திரியும் பெருமான் தனை, ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை, நாணி, ஊரன்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்-சொல் பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே . |
|
உரை
|
|
|
|