தொடக்கம் |
|
|
7.17 திருநாவலூர் நட்டராகம் |
1 | கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய, மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்; ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
2 | தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள், சபை முன் வன்மைகள் பேசிட, வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்; புன்மைகள் பேசவும், பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
3 | வேகம் கொண்டு ஓடிய வெள்விடை ஏறி ஓர் மெல்லியலை ஆகம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; போகம் கொண்டார், கடல் கோடியில் மோடியை; பூண்பது ஆக நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
4 | அஞ்சும் கொண்டு ஆடுவர், ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்; தஞ்சம் கொண்டார், அடிச்சண்டியை, தாம் என வைத்து உகந்தார்; நெஞ்சம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
5 | உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார்; உரித்தார், களிற்றை; செம்பொன் ஆர் தீவண்ணர்; தூ வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால், எம்பிரானார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
6 | கோட்டம் கொண்டார், குட மூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்; வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; ஆட்டம் கொண்டார், தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன் நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
7 | தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி, போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
8 | வாய் ஆடி, மாமறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து; தீ ஆடியார்; சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய், வேய் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
9 | படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும், வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள் இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
10 | “மிடுக்கு உண்டு” என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்; அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும் கொண்டார்; தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . |
|
உரை
|
|
|
|
|
11 | நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ் காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே . |
|
உரை
|
|
|
|