தொடக்கம் |
|
|
7.19 திருநின்றியூர் நட்டராகம் |
1 | அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்; பற்றவனார்; “எம் பராபரர்” என்று பலர் விரும்பும் கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால் செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
2 | வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்; நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ் தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
3 | அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ, சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்; மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
4 | ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும் ஆகி அடல் ஏறு உகந்தார், இசை ஏழ் உகந்தார்; முடிக் கங்கை தன்னை வேறு உகந்தார்; விரிநூல் உகந்தார்; பரி சாந்தம் அதா நீறு உகந்தார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
5 | வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால் அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார் நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
6 | ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப் பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச் சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
7 | தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்; மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்- அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய் நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
8 | எட்டு உகந்தார், திசை; ஏழ் உகந்தார், எழுத்து; ஆறும் அன்பர் இட்டு உகந்து ஆர் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர்; முன்நாள் பட்டு உகும் பார் இடைக் காலனைக் காய்ந்து, பலி இரந்து ஊண் சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
9 | காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார் சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப, மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க, நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
10 | வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்- தூயார்; சுடுபொடி ஆடிய மேனியர்; வானில் என்றும் மேயார்; விடை உகந்து ஏறிய வித்தகர்; பேர்ந்தவர்க்குச் சேயார்; அடியார்க்கு அணியவர்; ஊர் திரு நின்றியூரே . |
|
உரை
|
|
|
|
|
11 | சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில் சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ- ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய், பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே . |
|
உரை
|
|
|
|