தொடக்கம் |
|
|
7.26 திருக்காளத்தி நட்டராகம் |
1 | செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே! வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே! கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்! அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . |
|
உரை
|
|
|
|
|
2 | இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே! கமை ஆர் கருணையினாய்! கரு மா முகில் போல் மிடற்றாய்! உமை ஓர் கூறு உடையாய்! உருவே! திருக்காளத்தியுள் அமைவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . |
|
உரை
|
|
|
|
|
3 | படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே! விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்! கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்! உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே . |
|
உரை
|
|
|
|
|
4 | மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே! குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்; நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள் அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . |
|
உரை
|
|
|
|
|
5 | செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி, நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால், துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்! அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . |
|
உரை
|
|
|
|
|
6 | பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்; செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே! மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என் ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . |
|
உரை
|
|
|
|
|
7 | கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள் குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா! முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்! அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே . |
|
உரை
|
|
|
|
|
8 | நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக் கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே! பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்! ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! . |
|
உரை
|
|
|
|
|
9 | தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி, எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்! களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே . |
|
உரை
|
|
|
|
|
10 | கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே . |
|
உரை
|
|
|
|