2சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர்
ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப்
பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர்
எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
4கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம்,
பிச்சை ஊர் திரிவான்-கடவூர், வடபேறூர்,
கச்சி ஊர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை,
இச்சை ஊர் எமது அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
6திங்களூர், திரு ஆதிரையான் பட்டினம் ஊர்,
நங்களூர், நறையூர், நனி நால் இசை நாலூர்,
தங்களூர், தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
8தேசனூர், வினை தேய நின்றான்-திரு ஆக்கூர்,
பாசனூர், பரமேட்டி, பவித்திர பாவ-
நாசன்-ஊர் நனிபள்ளி, நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
10ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே.
உரை