தொடக்கம் |
|
|
7.35 திருப்புறம்பயம் கொல்லி |
1 | அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த் தங்கினோமையும், “இன்னது” என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே! கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும் பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
2 | பதியும், சுற்றமும், பெற்ற மக்களும், பண்டையார் அலர்; பெண்டிரும், நெதியில் இம் மனை வாழும் வாழ்க்கையும், நினைப்பு ஒழி(ம்), மட நெஞ்சமே! மதியம் சேர் சடைக் கங்கையான் இடம் மகிழும், மல்லிகை, சண்பகம், புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
3 | புறம் திரைந்து, நரம்பு எழுந்து, நரைத்து, நீ உரையால்-தளர்ந்து, அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிதுகாண்; இஃது அறிதியேல், திறம்பியாது எழு, நெஞ்சமே! சிறுகாலை நாம் உறு வாணியம், புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
4 | குற்று ஒரு(வ்)வரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் செற்று ஒரு(வ்)வரைச் செய்த தீமைகள், இம்மையே வரும், திண்ணமே; மற்று ஒரு(வ்)வரைப் பற்று இலேன்; மறவாது எழு(ம்), மட நெஞ்சமே! புற்று அர(வ்)வு உடைப் பெற்றம் ஏறி புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
5 | கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி தெள்ளிதா எழு, நெஞ்சமே! செங்கண் சே உடைச் சிவலோகன் ஊர் துள்ளி வெள் இள வாளை பாய் வயல்-தோன்று தாமரைப் பூக்கள் மேல், புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
6 | படை எலாம் பகடு ஆர ஆளிலும், பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும், கடை எலாம் பினைத் தேரைவால்; கவலாது எழு(ம்), மட நெஞ்சமே! மடை எலாம் கழுநீர் மலர்ந்து, மருங்குஎலாம் கரும்பு ஆட, தேன் புடை எலாம் மணம் நாறு சோலைப் புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
7 | முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும் ஆதலின் முன்னமே, என்னை நீ தியக்காது எழு(ம்), மட நெஞ்சமே! எந்தை தந்தை ஊர் அன்னச்சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணி பொழில், புன்னைக் கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
8 | மலம் எலாம் அறும், இம்மையே; மறுமைக்கும் வல்வினை சார்கிலா; சலம் எலாம் ஒழி, நெஞ்சமே! எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் கலம் எலாம் கடல் மண்டு, காவிரி நங்கை ஆடிய, கங்கை நீர் புலம் எலாம் மண்டிப் பொன் விளைக்கும் புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
9 | பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி கண்டு அரீயன கேட்டியேல், கவலாது எழு(ம்), மட நெஞ்சமே! தொண்டு அரீயன பாடித் துள்ளி நின்று, ஆடி வானவர்தாம் தொழும் புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழப் போதுமே. |
|
உரை
|
|
|
|
|
10 | துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை அஞ்சி, ஊரன் திருப் புறம்பயத்து அப்பனைத் தமிழ்ச் சீரினால் நெஞ்சினாலே, “புறம்பயம் தொழுது உய்தும்” என்று நினைத்தன வஞ்சியாது உரைசெய்ய வல்லவர், வல்லர், வான் உலகு ஆளவே. |
|
உரை
|
|
|
|
|
7.36 திருப்பைஞ்ஞீலி கொல்லி |
1 | கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு, ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்! பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்! ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே! |
|
உரை
|
|
|
|