தொடக்கம் |
|
|
7.43 திருமுதுகுன்றம் கொல்லிக்கௌவாணம் |
1 | நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார் துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
2 | ஏரிக் கனகக்கமலம் மலர் அன்ன சேவடி ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ? வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு, வருந்திப் போய், மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
3 | தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்! பண்டு அகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே? கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
4 | இளைப்பு அறியீர்; இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்? விளைப்பு அறியாத வெங் காலனை உயிர் வீட்டினீர்; அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
5 | ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம் தொறும் பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ? மாடம், மதில், அணி கோபுரம், மணி மண்டபம், மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
6 | இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டு இடைக் குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே? மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள், முழை வளர் ஆளி, முழக்கு அறா முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
7 | சென்று இல் இடைச் செடி நாய் குரைக்க, செடிச்சிகள் மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே? குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள, குறத்திகள் முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
8 | அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே? மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
9 | செட்டு நின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய, “அட்டுமின், சில்பலிக்கு!” என்று அகம் கடை நிற்பதே? பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர்! பரிசு என்கொலோ? முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
10 | எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்? பத்தியினால் இடுவார் இடைப் பலி கொண்மினோ! எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல் முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரே! |
|
உரை
|
|
|
|
|
11 | முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப் பித்தன் ஒப்பான் அடித்தொண்டன்-ஊரன்-பிதற்று இவை தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார், எத்தவத்தோர்களும், ஏத்துவார்க்கு இடர் இல்லையே. |
|
உரை
|
|
|
|