தொடக்கம் |
|
|
7.58 திருக்கழுமலம் தக்கேசி |
1 | சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து, தன் அருள் தந்த எம் தலைவனை; மலையின் மாதினை மதித்து, அங்கு ஒர் பால் கொண்ட மணியை; வருபுனல் சடை இடை வைத்த
எம்மானை; ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை; எண் வகை ஒருவனை; எங்கள் பிரானை; காதில் வெண்குழையனை; கடல் கொள மிதந்த கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
2 | மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன்; வருந்தல் உற்றேன்; மறவா வரம்
பெற்றேன்; சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன்; துணை என்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை, முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக் கற்பனை கற்பித்த கடவுளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
3 | திருத் தினைநகர் உறை சேந்தன் அப்பன்(ன்), என் செய்வினை அறுத்திடும் செம்பொனை,
அம் பொன் ஒருத்தனை, அல்லது இங்கு ஆரையும் உணரேன்; உணர்வு பெற்றேன், உய்யும் காரணம் தன்னால்; விருத்தனை, பாலனை, கனவு இடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன்; கருத்தனை, நிருத்தம் செய் காலனை, வேலைக் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
4 | மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்; பிழைத்து ஒரு கால் இனிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன்; பெற்றது ஆர் பெறுகிற்பார்? குழைக் கருங்கண்டனைக் கண்டு கொள்வானே பாடுகின்றேன்; சென்று கூடவும் வல்லேன்; கழைக் கரும்பும் கதலிப் பலசோலை கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
5 | “குண்டலம் குழை திகழ் காதனே!” என்றும், “கொடு மழுவாள் படைக் குழகனே!” என்றும், “வண்டு அலம்பும் மலர்க் கொன்றையன்!” என்றும், வாய் வெருவித் தொழுதேன், விதியாலே; பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்று ஆய், பசுபதி பதி வினவி, பலநாளும், கண்டல் அம் கழிக் கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
6 | “வரும், பெரும் வல்வினை” என்று இருந்து எண்ணி, வருந்தல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்; விரும்பி, என் மனத்து இடை மெய் குளிர்ப்பு எய்தி, வேண்டி நின்றே தொழுதேன், விதியாலே; அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை, ஐயனை, அறவன், என் பிறவி வேர் அறுக்கும் கரும்பினை, பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
7 | அயலவர் பரவவும், அடியவர் தொழவும், அன்பர்கள் சாயலுள் அடையல் உற்று இருந்தேன்- முயல்பவர் பின் சென்று, “முயல் வலை யானை படும்” என மொழிந்தவர் வழி முழுது எண்ணி; புயலினை, திருவினை, பொன்னினது ஒளியை, மின்னினது உருவை, என் இடைப் பொருளை, கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
8 | நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக, நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண்சுடரை; மனை தரு மலை மகள் கணவனை; வானோர் மாமணி மாணிக்கத்தை(ம்); மறைப்பொருளை; புனைதரு புகழினை; எங்களது ஒளியை; இருவரும், “ஒருவன்” என்று உணர்வு அரியவனை; கனை தரு கருங்கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
9 | மறை இடைத் துணிந்தவர் மனை இடை இருப்ப, வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய, துறை உறக் குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தக வின்மையை ஓரேன்; பிறை உடைச் சடையனை, எங்கள் பிரானை, பேர் அருளாளனை, கார் இருள் போன்ற கறை அணி மிடறு உடை அடிகளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே . |
|
உரை
|
|
|
|
|
10 | செழு மலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு அழும் மலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால், அறிவு அரிது, அவன் திருவடியிணை இரண்டும்; கழுமல வள நகர்க் கண்டுகொண்டு, ஊரன்-சடையன் தன் காதலன்-பாடிய பத்தும் தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் சூழகிலாவே . |
|
உரை
|
|
|
|