தொடக்கம் |
|
|
7.71 திருமறைக்காடு காந்தாரம் |
1 | யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன், பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில் தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
2 | சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான் இடம், தெரியில் முகரத்து இடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம், தகரத்து இடை தாழைத்திரள் ஞாழல்-திரள் நீழல், மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
3 | அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம் தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை, சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
4 | நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன், உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே! குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
5 | சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த! கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற, வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
6 | அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப் படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்- கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
7 | முளை வளர் இளமதி உடையவன், முன் செய்த வல்வினைகள்- களை களைந்து எனை ஆளல்(ல்) உறு கண்டன், இடம் செந்நெல் வளை விளைவயல் கயல் பாய்தரு குண, வார் மணல், கடல் வாய் வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
8 | நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம்கோன் இடம் அறிந்தோம்; கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கைச்- சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே. |
|
உரை
|
|
|
|
|
9 | குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்- எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால் வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே! |
|
உரை
|
|
|
|
|
10 | பார் ஊர் பல புடை சூழ் வளவயல் நாவலர் வேந்தன் வார் ஊர் வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர் நீர் ஊர் தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர், தாமே. |
|
உரை
|
|
|
|