தொடக்கம் |
|
|
7.85 திருக்கூடலையாற்றூர் புறநீர்மை |
1 | வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து, பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும், கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில் அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
2 | வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும், பை அரவு இள அல்குல் பாவையொடும்(ம்), உடனே, கொய் அணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில் ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
3 | ஊர்தொறும் வெண் தலை கொண்டு, “உண் பலி இடும்!” என்று, வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே, கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில் ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
4 | சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன் பந்து அணவும் விரலாள் பாவையொடும்(ம்) உடனே, கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
5 | வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ, நல் சோதி அது உரு ஆகி, சுரிகுழல் உமையோடும், கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
6 | வித்தக வீணையொடும், வெண்புரிநூல் பூண்டு, முத்து அன வெண் முறுவல் மங்கையொடும்(ம்) உடனே, கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
7 | மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில் அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
8 | மறை முதல் வானவரும், மால், அயன், இந்திரனும், பிறை நுதல் மங்கையொடும், பேய்க்கணமும், சூழ, குறள்படை அதனோடும், கூடலையாற்றூரில் அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
9 | வேலையின் நஞ்சு உண்டு, விடை அது தான் ஏறி, பால் அன மென்மொழியாள் பாவையொடும்(ம்) உடனே, கோலம் அது உரு ஆகி, கூடலையாற்றூரில் ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
10 | கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும் ஆடல் உகந்தானை, “அதிசயம் இது” என்று நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல் பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே. |
|
உரை
|
|
|
|