தொடக்கம் |
|
|
7.91 திருஒற்றியூர் குறிஞ்சி |
1 | பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்- காட்டும் கலமும் திமிலும் கரைக்கே ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
2 | பந்தும் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார், செந்தீவண்ணர், எம்தம் அடிகள், இறைவர்க்கு இடம்போல்- உந்தும் திரைவாய் ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
3 | பவளக் கனிவாய்ப் பாவை பங்கன், கவளக் களிற்றின் உரிவை போர்த்தான், தவழும் மதி சேர் சடையாற்கு, இடம்போல்- உகளும் திரைவாய் ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
4 | என்(ன்)னது எழிலும் நிறையும் கவர்வான்,- புன்னை மலரும் புறவில்-திகழும்- தன்னை முன்னம் நினைக்கத் தருவான், உன்னப்படுவான், -ஒற்றியூரே |
|
உரை
|
|
|
|
|
5 | பணம் கொள் அரவம் பற்றி, பரமன், கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி, வணங்கும் இடை மென்மடவார் இட்ட உணங்கல் கவர்வான்,-ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
6 | படை ஆர் மழுவன், பலவெண் நீற்றன், விடை ஆர் கொடியன், வேத நாவன், அடைவார் வினைகள் அறுப்பான், என்னை உடையான், உறையும்-ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
7 | சென்ற புரங்கள் தீயில் வேவ வென்ற விகிர்தன், வினையை வீட்ட நன்றும் நல்ல நாதன், நரை ஏறு ஒன்றை உடையான்,-ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
8 | கலவ மயில் போல் வளைக்கை நல்லார் பலரும் பரவும் பவளப்படியான், உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,- உலவும் திரைவாய் ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
9 | பற்றி வரையை எடுத்த அரக்கன் இற்று முரிய விரலால் அடர்த்தார்; எற்றும் வினைகள் தீர்ப்பார்;-ஓதம் ஒற்றும் திரைவாய் ஒற்றியூரே. |
|
உரை
|
|
|
|
|
10 | ஒற்றி ஊரும் அரவும் பிறையும் பற்றி ஊரும் பவளச் சடையான் ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த கற்றுப் பாட, கழியும், வினையே. |
|
உரை
|
|
|
|